March 28, 2024
  • March 28, 2024
Breaking News
March 19, 2018

இந்தியா வெல்லாமல் போயிருந்தால் துரதிருஷ்டம் – அதிரடி தமிழன் தினேஷ் கார்த்திக்

By 0 2733 Views

இலங்கையின் 75வது சுதந்திர தினத் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொண்ட ‘நிதாஹஸ் கோப்பை’ கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின.

பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இந்தியா வெற்றி பெற கடைசி ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவைப்பட, அப்போது பேட்டிங்க் செய்த தினேஷ் கார்த்திக் கடைச் பந்தில் ஆறு ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்து இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். சர்வதேச அணியில் இது 5-வது நிகழ்வாகும். இந்த வரலாற்று நிகழ்த்தியுள்ள சாதனையை தினேஷ் கார்த்திக், ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் கூறியது.

“இந்திய அணி வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அதில் அதிரடியாக ஆடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தொடரில் நாங்கள் உண்மையிலேயே நன்றாக ஆடினோம். எனவே இந்த போட்டியில் வெல்லாமல் போயிருந்தால் அது துரதிருஷ்டம்தான்.

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. முஸ்டாபிசுர் ரஹ்மான் வீசிய விதத்தை வைத்து நான் அதிரடியாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் அடித்த ‘ஷாட்’கள் அனைத்தும் அதிர்ஷ்டவசமாகக் கைகொடுத்தன.

இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது கடினமானது. ஆனால் ஒருமுறை கிடைத்தால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி..!”